என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போடி பஞ்சு குடோன் தீ"
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் மூணாறு செல்லும் சாலையில் புதூர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது. நேற்று இரவு 11 மணி வரை குமார் குடோனில் வரவு செலவு கணக்குகளை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் குடோன் தீ பிடித்து எரிவதாக அவருக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு வந்து அவர் தீயை அணைக்க முயன்றார். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதும் குடோனில் இருந்த பஞ்சு பேரல்கள், இயந்திரங்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. குடோனில் தான் இருந்தவரையில் தீ விபத்து நடக்காமல் தான் சென்ற சிறிது நேரத்தில் விபத்து நடந்ததால் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றிருக்கலாம் என்றும் மின் கசிவினால் தீ விபத்து நடக்க வாய்ப்பு இல்லை என்றும் குமார் போடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்